ADDED : மே 04, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுார், சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம், 60; பஞ்சர் கடை வைத்திருந்தார்.
இவரும், நண்பர் நடராஜனும், தாயம் பாளையம் பிரிவு அருகே டூ வீலரில் ரோட்டை கடக்க முயன்றனர். கோவை நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியதில் சதாசிவம் உயிரிழந்தார். நடராஜன் பலத்த காயத்துடன், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

