sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 5 ஆண்டு சிறை 

/

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 5 ஆண்டு சிறை 

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 5 ஆண்டு சிறை 

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 5 ஆண்டு சிறை 

1


ADDED : அக் 29, 2025 12:54 AM

Google News

ADDED : அக் 29, 2025 12:54 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: அவிநாசி ஒன்றியம், பழங்கரையைச் சேர்ந்தவர் ரத்தினசாமி, 62. ரியல் எஸ்டேட் தரகர். அதே பகுதியில் சில வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு தொழிலாளி குடும்பம் வசித்து வந்தது.

அக்குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியிடம், 2023ம் ஆண்டில் ரத்தினசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவிநாசி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரத்தினசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில், நீதிபதி கோகிலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜமிலா பானு ஆஜரானார்.

இதில் ரத்தினசாமிக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us