/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் விதிமுறை அமலுக்கு வராத கணக்கம்பாளைம்
/
தேர்தல் விதிமுறை அமலுக்கு வராத கணக்கம்பாளைம்
ADDED : மார் 17, 2026 09:24 PM

உடுமலை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும், மடத்துக்குளம் தொகுதி கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிகளில், அரசின் நலத்திட்ட பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டும், அரசியல் கட்சியினர் பிளக்ஸ்பேனர்கள் அகற்றுதல் உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டது.
ஆனால், மடத்துக்குளம் தொகுதி, கணக்கம்பாளையம் ஊராட்சியில், எஸ்.வி.,புரம், ஜீவா நகர் பஸ் ஸ்டாப், எம்.ஜி.ஆர்., நகர், பிரைட் ஸ்கூல் ஓட்டுச்சாவடி உள்ளிட்ட கடந்த, 15 நாட்களுக்கு முன், ஆளும்கட்சி தரப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்த விளம்பர பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல், உள்ளது.
கணக்கம்பாளையம் ஊராட்சியில் தேர்தல் நடக்கவில்லையா, என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

