/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுரங்க பாலத்தில் கழிவுநீர் தீர்வு காண வலியுறுத்தல்
/
சுரங்க பாலத்தில் கழிவுநீர் தீர்வு காண வலியுறுத்தல்
சுரங்க பாலத்தில் கழிவுநீர் தீர்வு காண வலியுறுத்தல்
சுரங்க பாலத்தில் கழிவுநீர் தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : நவ 04, 2024 09:40 PM
உடுமலை; உடுமலை, ராமசாமி நகர், பழனியாண்டவர் நகர் உள்ளிட்ட தெற்கு பகுதிக்கு செல்ல பிரதான வழித்தடமாக, பெரியார் நகர் ரயில்வே சுரங்க பாலம் உள்ளது.
திட்ட வடிவமைப்பு குளறுபடி காரணமாக, இப்பாலத்தில் ஆண்டு முழுவதும் சாக்கடை கழிவு நீர் தேங்கி வருவதோடு, மழை காலத்தில் பாலம் வெள்ள நீரில் மூழ்கி வருகிறது.
இங்கு கழிவு நீர் சேகரிப்பு கிணறு, நீர் வெளியேற்றும் மோட்டார் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நகராட்சி சார்பில், இதற்கான பணிகள் நடந்தும், ரயில்வே மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், தொடர்ந்து பல அடி உயரத்திற்கு கழிவு நீர் தேங்கி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

