/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு; தொடரும் போக்குவரத்து நெரிசல்
/
பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு; தொடரும் போக்குவரத்து நெரிசல்
பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு; தொடரும் போக்குவரத்து நெரிசல்
பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு; தொடரும் போக்குவரத்து நெரிசல்
ADDED : செப் 02, 2025 08:06 PM
உடுமலை; உடுமலை ராஜேந்திரா ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை நகரில் பிரதான ரோடுகளில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில், நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, முக்கிய வணிக கடைகள், ரயில்வே ஸ்டேஷன் ஆகியவை அமைந்துள்ளன.
இதனால், இந்த ரோடு எப்பொழுதும் போக்குவரத்து அதிகம் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், இந்த ரோட்டில் தள்ளுவண்டிகள் நிறுத்தப்படுவதும், கடைகளின் ஆக்கிரமிப்புகளும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.
குறிப்பாக, திங்கட்கிழமைகளில் சந்தை கூடுகிறது. அன்று ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் ரோட்டில் நடக்க முடியாமல் திணற வேண்டியதுள்ளது.
எனவே, இந்த ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, போலீசார் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.