sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விடுமுறை நாளில் நிகழ்ச்சி; கோவில் நிர்வாகம் அழைப்பு

/

விடுமுறை நாளில் நிகழ்ச்சி; கோவில் நிர்வாகம் அழைப்பு

விடுமுறை நாளில் நிகழ்ச்சி; கோவில் நிர்வாகம் அழைப்பு

விடுமுறை நாளில் நிகழ்ச்சி; கோவில் நிர்வாகம் அழைப்பு


ADDED : ஆக 13, 2025 01:09 AM

Google News

ADDED : ஆக 13, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கோவில் விழா மேடையில், விடுமுறை நாட்களில், ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம் என, விஸ்வேஸ்வர சுவாமி கோவில் நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது.

திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில்களில், மாதந்தோறும் பல்வேறு வகையான ஆன்மிக வழிபாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நவராத்திரி விழா, கோவில் தேர்த்திருவிழா நாட்களில், விஸ்வேஸ்வரர் கோவில் விழா மேடையில், கலை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, பஜனை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்நிலையில், அறங்காவலர் குழு முடிவுப்படி, கோவில் விழா மேடையில், விடுமுறை நாட்களில் இலவசமாக ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தலாம் என அறிவித்துள்ளது. கோவில் விழாக்கள், பிரதோஷ வழிபாடு நாட்கள் நீங்கலாக, மற்ற விடுமுறை நாட்களில் விழா நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், ''விஸ்வேஸ்வர சுவாமி கோவில் விழாமேடை நிகழ்ச்சிகளை, பக்தர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியுடன் உள்ளது. சனி, ஞாயிறு போன்ற நாட்களில், ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆன்மிக பாடல், முற்றோதல், பரதநாட்டியம், ஆன்மிக நாட்டிய நாடகம், சொற்பொழிவு, இன்னிசை என, பல்வேறு ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சி மட்டுமே நடத்த வேண்டும். விவரங்களுக்கு, கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us