/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்கலை தேர்வில் சிறப்பிடம்; சிக்கண்ணா கல்லுாரி அபாரம்
/
பல்கலை தேர்வில் சிறப்பிடம்; சிக்கண்ணா கல்லுாரி அபாரம்
பல்கலை தேர்வில் சிறப்பிடம்; சிக்கண்ணா கல்லுாரி அபாரம்
பல்கலை தேர்வில் சிறப்பிடம்; சிக்கண்ணா கல்லுாரி அபாரம்
ADDED : அக் 08, 2025 11:54 PM

திருப்பூர்; பாரதியார் பல்கலை தேர்வில், பல்கலை அளவில், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள், 14 பேர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.இளநிலை பட்ட வகுப்புகளில், சர்வதேச வணிகவியல் துறையில், கீரன் கவுதமன் தங்கப்பதக்கம், மைத்ரேயன் வெள்ளி பதக்கம் வென்றனர். இதே துறையில் காயத்ரி, ஐந்தாமிடம்; மோனிகா, ஏழாமிடம்; கண்ணன், 10ம் இடம் பிடித்தனர்.
விலங்கியல் துறையில், யாஸ்மின் நான்காமிடம்; பொருளியல் துறையில், சக்திவேல், ஏழாமிடம் பெற்றனர்.முதுநிலைபட்ட வகுப்புகளில், சர்வதேச வணிகவியல் துறையில் லக்ஷணா மூன்றாமிடம்; கோகிலா, ஏழாமிடம்; அபர்ணா, எட்டாமிடம்; பவித்ரா, 10ம் இடம் பிடித்தனர். வேதியியல் துறையில் கவுசல்யா, நான்காமிடம்; தமிழ் இலக்கியத்தில், மைத்ரா, 9ம் இடம் பிடித்தார்.பல்கலை அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை, கல்லுரி முதல்வர் கிருஷ்ணன், கல்லுாரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பொமற்றும் துறைத் தலைவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.