sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போக்குவரத்து தொழிலாளர்கள் வேப்பிலை அடித்து போராட்டம்

/

போக்குவரத்து தொழிலாளர்கள் வேப்பிலை அடித்து போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேப்பிலை அடித்து போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேப்பிலை அடித்து போராட்டம்


ADDED : அக் 08, 2025 11:54 PM

Google News

ADDED : அக் 08, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி, திருப்பூர் போக்குவரத்து தொழிலாளர்கள் வேப்பிலை அடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய டி.ஏ., மற்றும் பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் காங்கயம் ரோடு அரசு போக்குவரத்து பணிமனை முன், 52வது நாளாக நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

நேற்று தொழிற்சங்க நிர்வாகி தேவநேசன் தலைமையில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேப்பிலை அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை ஏற்க மறுக்கும் பேயை, உடுக்கை அடித்து வேப்பிலையால் அடித்து விரட்டுவது போல நடந்த நுாதன போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மா.கம்யூ., திண்டுக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் கருப்பசாமி, திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி உன்னிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.






      Dinamalar
      Follow us