sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடுதல் ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு

/

கூடுதல் ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு

கூடுதல் ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு

கூடுதல் ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 25, 2025 08:59 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 08:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதையில் உடுமலை அமைந்துள்ளது. உடுமலை வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் தினமும் பல்வேறு நகரங்களுக்கு ஏராளமான பயணியர் செல்கின்றனர். பண்டிகை, விடுமுறை நாட்களில் தற்போது செல்லும் ரயில்கள் பயணியருக்கு போதுமானதாக இல்லை.

இதனால், இந்த ரயில்களில் அமர இடமின்றியும், நின்று கொண்டும் பயணியர் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, கோவை, பாலக்காட்டிலிருந்து, ராமேஸ்வரம், துாத்துக்குடி, கேரள மாநிலம் கொல்லத்திற்கு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us