/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் வீசப்பட்ட காலாவதி பொருட்கள்
/
ரோட்டில் வீசப்பட்ட காலாவதி பொருட்கள்
ADDED : ஜூலை 07, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் ; பல்லடம், - திருப்பூர் ரோடு, தெற்குபாளையம் பிரிவு அருகே, காலாவதியான சிப்ஸ் பாக்கெட்கள், ரோட்டோரத்தில் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.
சமீபத்தில்தான், பல்லடம் -- உடுமலை ரோடு, சித்தம்பலம் அருகே, இதேபோல், நுாற்றுக்கணக்கான ரஸ்க் பாக்கெட்கள் குவியல், விளைநிலத்தை ஒட்டி ரோட்டோரத்தில் வீசப்பட்டிருந்தன.
இவ்வாறு காலாவதி உணவு பொருட்களை பொது இடங்களில்வீசி செல்வதால், மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் அவற்றை உண்டு பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.