ADDED : ஜூன் 20, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, சென்னை - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸில் இரு மார்க்கத்திலும் ஒரு ஏ.சி. பெட்டி நாளை முதல் சேர்க்கப்படுகிறது.
சென்னை எழும்பூர் - மங்களூரு எக்ஸ்பிரஸில் நேற்று முதல் ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது. நாளை முதல் மங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்படும் ரயிலில், ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்பட உள்ளதாக, சேலம் கோட்ட அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
