sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 26, 2025 09:11 PM

Google News

ADDED : மார் 26, 2025 09:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- -- நமது நிருபர் -

திருப்பூர் மாவட்டத்தில் மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் உள்ளடக்கிய ஏதாவது ஒரு பகுதியில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

முருங்கை குறைந்த மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் அதிக விளைச்சலை கொடுக்கும். திருப்பூர் மாவட்டம் மழை மறைவு பிரதேசமாக இருப்பதால், முருங்கை விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பருவ மழை தீவிரமடைந்ததால் முருங்கை பூக்கள் மொத்தமாக உதிர்ந்தது. இதனால், விளைச்சல் இல்லை. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து குறைந்தளவு காய்கள் சந்தைக்கு வந்தது. இதனால், விலை உச்சத்தை தொட்டது.

ஒரு கிலோ முருங்கைக்காய், 200 ரூபாய்க்கு விலை போனது. பங்குனி மாதம் துவங்கியதும் முருங்கை சீசன் களை கட்டத் துவங்கியது. தற்பொழுது நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது.

அறுவடை செய்த முருங்கையை, விவசாயிகள் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஒரு கிலோ முருங்கைக்காய் குறைந்தபட்சம் இரண்டு ரூபாய்க்கு விலை போகிறது. இது பறிப்பு கூலிக்கு கூட கட்டுபடி ஆகவில்லை.

விலை சரியும் போதெல்லாம் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிப்பதால் நஷ்டத்தில் இருந்து முருங்கை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைப்பது வாடிக்கையாக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் உள்ளடக்கிய ஏதாவது ஒரு பகுதியில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும். முருங்கை காய்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முருங்கை விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us