/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
31ல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
/
31ல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜன 24, 2025 11:25 PM
திருப்பூர்; மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம், அறை எண் 240ல், வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், விவசாயிகளின் குறைகளை கேட்கிறார். காலை, 10:30 மணிக்கு துவங்கும் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண் துறை சார்ந்த பிரச்னைகளை மனுவாக அளிக்கலாம்.
கூட்டத்தில், பதிவு செய்யப்பட்ட சங்கங்களில், ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம் கோரிக்கைகள் குறித்து பேசலாம். அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.
குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகள் நுண்ணுயிர் பாசனம் அமைக்க ஏதுவாக, வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் உரிய ஆவணங்களை கொண்டுவந்து, நுண்ணுயிர் மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்துகொள்ளலாம்.