/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது
விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது
விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது
ADDED : செப் 20, 2024 10:06 PM
உடுமலை : திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும், 27ம் தேதி, காலை 10:30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுலகம், அறை எண், 240ல் நடக்கிறது. விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க ஏதுவாக, வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்ட, வேளாண் உதவி மையம் அமைக்கப்படுகிறது. இங்கு, விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும்.
உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு, நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்யப்படும்.
வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம், என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.