/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 14ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
/
வரும் 14ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
ADDED : மே 08, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 14ம் தேதி நடக்கிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 14 ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. வருவாய் கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து, பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

