/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 22ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
/
வரும் 22ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
ADDED : ஜன 12, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 22ம் தேதி நடக்கிறது.
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 22ம் தேதி, மதியம், 2:00 மணிக்கு, உடுமலை அரசு கல்லுாரி கூட்ட அரங்கில், கோட்டாட்சியர் தலைமையில் நடக்கிறது.
கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் பங்கேற்குமாறு, கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.