/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 25ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
/
வரும் 25ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
ADDED : மார் 20, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,: உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 25ம் தேதி நடக்கிறது.
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம், உடுமலை கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரும், 25ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடக்கிறது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.