/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரக்கன்றுகள் நட விவசாயிகள் ஆர்வம் உடுமலை பகுதிகளில் அதிகரிப்பு
/
மரக்கன்றுகள் நட விவசாயிகள் ஆர்வம் உடுமலை பகுதிகளில் அதிகரிப்பு
மரக்கன்றுகள் நட விவசாயிகள் ஆர்வம் உடுமலை பகுதிகளில் அதிகரிப்பு
மரக்கன்றுகள் நட விவசாயிகள் ஆர்வம் உடுமலை பகுதிகளில் அதிகரிப்பு
ADDED : அக் 02, 2025 10:35 PM

உடுமலை:வனத்துக்குள் திருப்பூர் -11 திட்டத்தின் கீழ், நடப்பாண்டு இரண்டு லட்சம் மரக்கன்றுகளை தாண்டி, நடவு பணி நடந்து வருகிறது.
வனத்துக்குள் திருப்பூர்-11 திட்டத்தின் கீழ். நடப்பாண்டு மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடந்து வருகிறது.
மாவட்டம் முழுவதும், இதுவரை இரண்டு லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
உடுமலை பகுதியில், பசுமை பரப்பு அதிகரிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம்காரணமாக, அதிகளவு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, 90 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள், குறைந்த நீர்த்தேவை, பராமரிப்பு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், மரச்சாகுபடி திட்டமாகவும்,வரப்பு ஓரங்களில் மரம் வளப்பால் வருவாய் என்ற அடிப்படையில் அதிகளவு நடவு செய்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், குடிமங்கலம் பெரியபட்டியை சேர்ந்த விவசாயி ரமேஷ்க்கு சொந்தமான நிலத்தில், 250 மலைவேம்பு நடவு செய்யப்பட்டது.
அதே போல், வல்லக்குண்டாபுரம், விவசாயி எத்திராஜூக்கு சொந்தமான நிலத்தில், 450 பாக்கு மரக்கன்றுகளும், அமராவதி நகர் அம்பிகாபதிக்கு சொந்தமான விவசாய நிலத்தில், குமிழ், தேக்கு என, 350 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள். தொழிற்சாலை, கோழிப்பண்ணை வளாகங்கள், கோவில். கல்லுாரி, பள்ளி வளாகங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
மரக்கன்றுகள் நடவு செய்து, முறையாக பராமரித்து, பசுமை வளர்க்கும் பணியில் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.