sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முட்டைகோஸ் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்

/

முட்டைகோஸ் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்

முட்டைகோஸ் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்

முட்டைகோஸ் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்


ADDED : மார் 24, 2025 11:12 PM

Google News

ADDED : மார் 24, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; முட்டை கோஸ் சாகுபடியை, சொட்டு நீர் பாசனம் வாயிலாக சமவெளிப்பகுதியிலும், உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர்.

உடுமலை உள்ளிட்ட சந்தைகளுக்கு, முட்டைகோஸ், மலைப்பகுதியில், இருந்து விளைவிக்கப்பட்டு, விற்பனைக்காக முன்பு கொண்டு வரப்பட்டது. சீசன் சமயங்களில், தேவை அதிகரித்து, முட்டைகோஸ் விலை அதிகரிப்பது வழக்கம்.

இந்நிலையில், சொட்டு நீர் பாசனம் வாயிலாக முட்டைகோஸ் சாகுபடியையும், உடுமலை பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலாம்பாளையம், குட்டியகவுண்டனுார், ஆண்டியகவுண்டனுார், கிளுவங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், இரு சீசன்களாக, முட்டைகோஸ் சாகுபடி செய்கின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது:

தனியார் நாற்று பண்ணைகளில், முட்டைகோஸ் நாற்றுகளை விலைக்கு வாங்கி, நடவு செய்கிறோம்.

ஏக்கருக்கு, 45 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது; 13 ஆயிரம் கிலோ வரை, மகசூல் எதிர்பார்க்கிறோம். முறையாக பராமரிப்பு செய்தால், 100 நாட்களில், அறுவடை செய்யலாம்.

பிற மாவட்ட வியாபாரிகள் நேரடியாகவும் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர். தற்போது, முட்டைகோஸ் அறுவடைக்கு தயாராகி வருகிறது.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us