sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மானிய விலையில் நெல் விதைகள் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

/

மானிய விலையில் நெல் விதைகள் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

மானிய விலையில் நெல் விதைகள் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

மானிய விலையில் நெல் விதைகள் விவசாயிகள் பயன்பெற அழைப்பு


ADDED : ஜன 03, 2025 10:15 PM

Google News

ADDED : ஜன 03, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் சாகுபடி துவங்கியுள்ள நிலையில், வேளாண் துறை வாயிலாக மானிய விலையில் நெல் விதைகள் வினியோகம் செய்யப்படுகிறது,

உடுமலை வட்டாரம், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம் பகுதிகளில், இரண்டாம் பருவம் நெல் சாகுபடிக்காக, அமராவதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ள நிலையில், இப்பகுதிகளில் இடைவிடாமல், தொடர்ந்து நெல் சாகுபடி செய்யப்படுவதால், மண் வளத்தை மேம்படுத்தும் வகையில், நெல் நடவுக்கு முன், ஒரு ஏக்கருக்கு, 100 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம், நெல் நுண்ணூட்டம், 5 கிலோ, திரவ உயிர் உரங்கள், ஒரு லிட்டர் ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது, மண் வளம் பெருகி, பயிர் வளர்ச்சி சிறப்பாக அமைவதோடு, மகசூல் அதிகரிக்கும். மேலும், வேளாண் துறை வாயிலாக, விவசாயிகளுக்கு, கோ-51, கோ-55, ஏ.டி.டி.,-45 ஆகிய சான்று பெற்ற நெல் விதைகள், தேவையான அளவு இருப்பு உள்ளது. இந்த வகை நெல் ரகங்கள் நோய் எதிர்புசக்தி உள்ளதுடன், அதிக மகசூல் திறன் உள்ளதாகும்.

எனவே, நெல் சாகுபடி விவசாயிகள் இந்த ரகங்களை வேளாண் துறையில் மானிய விலையில் பெற்று நடவு செய்து பயன்பெறுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us