sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவசாயிகள் மகாசபை ஆர்ப்பாட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

/

விவசாயிகள் மகாசபை ஆர்ப்பாட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

விவசாயிகள் மகாசபை ஆர்ப்பாட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

விவசாயிகள் மகாசபை ஆர்ப்பாட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை


ADDED : நவ 06, 2025 11:21 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில் அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தாலுகா செயலாளர் அருணாசலம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில இணைசெயலாளர் செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், 'மடத்துக்குளம் தாலுகாவில், நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய நில உரிமையாளர்களுக்கு பாத்தியமான சுமார், 750 ஏக்கர் நிலம் உள்ளது. நில உரிமையாளர்கள் இடம் பெயர்வு உள்ளிட்ட காரணங்களால், அப்பகுதி விவசாயிகள் அந்நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். அந்நிலங்களை முறைகேடாக பத்திரபதிவு செய்துள்ளனர்.

பத்திரபதிவு செய்த நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

உடுமலை நகர செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.






      Dinamalar
      Follow us