sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பைப்லைன் மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு

/

பைப்லைன் மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு

பைப்லைன் மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு

பைப்லைன் மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு


ADDED : ஜன 29, 2025 03:43 AM

Google News

ADDED : ஜன 29, 2025 03:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பைப் லைனை மாற்று வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைமடை விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

பி.ஏ.பி., அலகுமலை கிளை வாய்க்கால் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

பாசன விவசாயிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில், பி.ஏ.பி., கிளை வாய்க்கால் மதகு எண்: 8ல், 6 இன்ச் பைப் பொருத்தப்பட்டுள்ளது. இதை மாற்றிவிட்டு, 9 இன்ச் அளவுள்ள பைப் பொருத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பெரிய அளவிலான பைப் பொருத்தினால், கடைமடைக்கு முழுமையாக தண்ணீர் வந்து சேராது.

இதனால், மூவாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, தென்னை, காய்கறி உள்ளிட்ட விவசாய பயிர்கள் பாதிக்கப்படும். பாசன விவசாயிகளை கலந்தாலோசிக்காமலேயே, பைப்லைன் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.

கிளை வாய்க்காவில் பெரிய பைப் பொருத்தும் திட்டத்தை கைவிடவேண்டும். இதுகுறித்து, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். பரிசீலித்து, பைப் லைனை மாற்றும் உத்தரவை திருப்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us