sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

270 கோழிகள், 3 ஆடுகள் கடித்து குதறல் தெருநாய்களால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி

/

270 கோழிகள், 3 ஆடுகள் கடித்து குதறல் தெருநாய்களால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி

270 கோழிகள், 3 ஆடுகள் கடித்து குதறல் தெருநாய்களால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி

270 கோழிகள், 3 ஆடுகள் கடித்து குதறல் தெருநாய்களால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி

1


ADDED : ஜன 05, 2025 12:51 AM

Google News

ADDED : ஜன 05, 2025 12:51 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள், விவசாய நில பட்டியில் புகுந்து ஆடுகளைக் கடிக்கின்றன. இதுவரை நுாற்றுக்கணக்கான ஆடுகள் பலியாகியுள்ளன. அதேபோன்று, கோழிகளையும் கடிக்கின்றன.

நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் மாவட்டம், காங்கேயம், அலகேகவுண்டம் புதுாரில், கோபால்ராஜ் என்பவரின் கோழிப்பண்ணைக்குள் புகுந்து தெருநாய்கள் கடித்ததில், பண்ணைக்குள் இருந்த, 270 கோழிகள் பலியாகின.

திருப்பூர், ஊத்துக்குளி வட்டம், புஞ்சை தளவாய்பாளையம் கிராமம், சாலபாளையத்தில் உள்ள மோகன்ராஜ் என்பவரது தோட்டத்து பட்டிக்குள் நுழைந்த, மூன்று தெருநாய்கள், அங்கிருந்த, மூன்று ஆடுகளைக் கடித்து, காயப்படுத்தியுள்ளன.

அடுத்தடுத்த இச்சம்பவங்கள், விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

'தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் விளைவாக, '45 நாட்களில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, கடந்தாண்டு, நவ., 23ல், மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது.

வெள்ளக்கோவில் விவசாயி வேலுசாமி கூறியதாவது:

நாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக, மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. இன்னும், 4, 5 நாட்களில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாக வேண்டும்.

நேற்று ஏற்பட்ட கோழி, ஆடுகள் பலி சம்பவம் குறித்து தாசில்தார் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்; இந்த விவகாரத்தை, கலெக்டரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை வழங்கி உள்ளோம். கலெக்டர்தான் முடிவெடுக்க வேண்டும்.

தெருநாய்களை முழுவீச்சில் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது, இறந்த ஆடுகளுக்கு நிச்சயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். அரசு கொள்கை முடிவு எடுத்தாக வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us