sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

/

குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்


ADDED : ஜூலை 25, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சிறுபூலுவபட்டி ரிங் ரோட்டில், பொது இடத்தில் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு மாநகராட்சி சுகாதார பிரிவினர் அபராதம் விதித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு சிறுபூலுவபட்டி ரிங் ரோட்டில் பொது இடத்தில் பனியன் நிறுவனத்திலிருந்து வெளியேறும் போம் கழிவுகள் கொட்டிக்கிடந்தது.நேற்று அதிகாலை அவ்வழி யாக ஆய்வுக்குச் சென்ற மாநகராட்சி கமிஷனர் அமித் இதனை பார்த்தார்.

உடனடியாக முதல் மண்டல சுகாதார பிரிவினரை இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஆய்வு செய்த சுகாதார பிரிவினர், அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனம் இந்தகழிவுகளைக் கொட்டியதை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து அந்நிறுவனத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை, இது போன்ற நிறுவனக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது. இதில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. தற்போது தான் முதன் முறையாக பொது இடத்தில் கழிவைக் கொட்டிய நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us