sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

/

திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்


ADDED : டிச 13, 2024 09:18 PM

Google News

ADDED : டிச 13, 2024 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை திருமூர்த்திமலைப்பகுதிகளில் பெய்த கனமழையால், அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது. அருவியில், நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மீக மையமாக உள்ளது. மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவி மற்றும் மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

திருமூர்த்திமலைப்பகுதிகளில், இரு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில், பல அடி உயரத்திற்கு நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதோடு, அருவிக்கு செல்லும் நடை பாலம் வரை வெள்ள நீர் ஓடி வருகிறது.

அதே போல், மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை, நேற்று முன்தினம், இரவு, 7:45 மணிக்கு, வெள்ளநீர் சூழ்ந்தது.

படிப்படியாக, வெள்ள நீர் ஆர்ப்பரித்து வந்ததோடு, கன்னிமார் கோவில், அமணலிங்கேஸ்வரர் கோவில், விநாயகர் கோவில் என பல அடி உயரத்திற்கு வெள்ள நீர் ஓடியது. பல ஆண்டுகளுக்கு பின், கோவில் வளாகம் காட்டாற்று வெள்ளத்தால் சூழ்ந்ததால், இரண்டாவது நாளாக நேற்றும் பக்தர்கள், சுற்றுலா பயணியர், அருவி மற்றும் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us