/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீரன் சின்னமலை படத்துக்கு மலர் துாவி மரியாதை
/
தீரன் சின்னமலை படத்துக்கு மலர் துாவி மரியாதை
ADDED : ஆக 03, 2025 11:47 PM

திருப்பூர்:
திருப்பூரில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
கொ.மு.க., கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நடந்த நிகழ்ச்சியில், தீரன் சின்னமலை படத்துக்கு கட்சி நிறுவனர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் மாலை அணிவித்து, மலர்துாவி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பின், நிர்வாகிகள் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்திலும் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கொ.ம.தே.க., திருப்பூர் மாநகர் மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், வேலம் பாளையம், அனுப்பர்பாளையம், செட்டி பாளையம், சிங்காரவேலன் நகர், பிச்சம் பாளையம், ஜீவா காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீரன் சின்னமலை படத்துக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தம்பி வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.
இளைஞர் பேரவை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், தீரன் சின்னமலை படத்துக்கு, மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகர செயலாளர் துரை தண்டபாணி, தலைமை வகித்தார். மாநகர தலைவர் அஜய்மணி, முன்னிலை வகித்தார். மாணவர் அணி நிர்வாகிகள் சஞ்சய், அஜய், வர்த்தக அணி நிர்வாகிகள் ஆனந்தகுமார், ரகுபதி, தெற்கு மாநகர நிர்வாகி மதிவாணன், கனகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொங்கு சொந்தங்கள் திருப்பூர் தீரன் சின்னமலை கொங்கு சொந்தங்கள் அமைப்பு சார்பில், நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. மங்கலம் ரோடு பூச்சக்காடு, தாடிக்கார முக்கு, வெடத்தலாங்காடு, பழகுடோன், தெற்குத்தோட்டம், பாலாஜி நகர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் கொங்கு சொந்தங்கள் அமைப்பினர், தம்பி நற்பணி மன்றம், செல்வ விநாயகர் கோவில் நிர்வாகிகள், சக் ஷம் அமைப்பினர், கருப்பசாமி கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த இடங்களில் தீரன் சின்னமலை படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் துாவியும் மரியாதை செலுத்தப்பட்டது.