sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

/

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 18, 2024 11:19 PM

Google News

ADDED : டிச 18, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காலி பணியிடங்களை நிரப்ப கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரகலா வரவேற்றார். மாநில செயலாளர் செந்தில்குமார், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

சத்துணவு ஊழியர்கள் திரளானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்தவேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச பென்ஷனான 6,750 ரூபாயை வழங்கவேண்டும்.

மூவாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்வதை அரசு கைவிடவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என, வலியுறுத்தினர்.

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us