/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமரன் ரோட்டரி நடத்திய கால் தெரபி முகாம்
/
குமரன் ரோட்டரி நடத்திய கால் தெரபி முகாம்
ADDED : அக் 04, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் குமரன் ரோட்டரி சங்கமும், சூலுார் கால் தெரபி சென்டரும் இணைந்து, திருப்பூர் குமரன் ரோட்டரி வளாகத்தில், கடந்த செப்., 20 முதல் அக்., 4 வரை மாபெரும் கால் தெரபி முகாம் நடத்தின.
ரோட்டரி தலைவர் கந்தசாமி, செயலாளர் சிவகுமார், பொருளாளர் பழனிசாமி, பிராஜெக்ட் சேர்மன் கிளப் அட்மின் மூர்த்தி தலைமையில் முகாம் நடந்தது. காலில் உள்ள அக்கு புள்ளிகள்; ஆரோக்கிய தகவல்களை தெரபி ஆலோசகர் துரைராஜ் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பகிர்ந்தனர். முகாமில் 700க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.