sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஏலச்சீட்டு நடத்தி மோசடி; டி.எஸ்.பி.,யிடம் புகார்

/

ஏலச்சீட்டு நடத்தி மோசடி; டி.எஸ்.பி.,யிடம் புகார்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி; டி.எஸ்.பி.,யிடம் புகார்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி; டி.எஸ்.பி.,யிடம் புகார்


ADDED : ஜூன் 06, 2025 06:22 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; -ஏலச்சீட்டு நடத்தி மோசடி நடந்ததாக புகார் அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

பல்லடம், அண்ணா நகரை சேர்ந்த ஒருவர்(பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது), கடந்த, 2021ம் ஆண்டு ஏலச்சீட்டு ஒன்றை நடத்தினார். 21 பேர் ஏலச்சீட்டில் இணைந்தனர். ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டுக்கு குறித்த நேரத்தில் முழுமையாக தவணையை செலுத்தினோம். இறுதியில், சீட்டுத் தொகை பெறுவதற்காக கேட்டபோது, பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தார். எஸ்.பி.,யிடம் புகார் அளித்தோம்.

பல்லடம் ஸ்டேஷனில், கடந்த, 2022ம் ஆண்டு விசாரணை நடந்தது. பணத்தை தந்து விடுவதாக கூறிய அவர், போலீசார் முன்னிலையில் ஒப்புதல் கடிதம் அளித்தார். எட்டு முறை புகார் அளித்தபோதும், தொடர்ந்து, பணத்தை தந்து விடுவதாக கூறி ஒப்புதல் கடிதம் மட்டுமே கொடுத்து ஏமாற்றி வருகிறார். சீட்டுத் தொகை கிடைக்காததால், வாங்கிய கடனுக்காக வட்டி செலுத்தி வருகிறோம். தி.மு.க., உறுப்பினராக அவர் இருப்பதால், போலீசாரும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்களா என்ற சந்தேகம் உள்ளது. சீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us