/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் இலவச கருத்தரித்தல் ஆலோசனை
/
ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் இலவச கருத்தரித்தல் ஆலோசனை
ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் இலவச கருத்தரித்தல் ஆலோசனை
ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் இலவச கருத்தரித்தல் ஆலோசனை
ADDED : ஜூலை 02, 2025 11:52 PM

திருப்பூர்; திருப்பூர், பி.என்.,ரோடு, போயம்பாளையம் ஸ்ரீ சரண் கருத்தரித்தல் மையம் சார்பில் குழந்தையின்மைக்கான மாபெரும் இலவச கருத்தரித்தல் ஆலோசனை முகாம் வரும், 15ம் தேதி வரை நடக்கிறது.
இம்முகாமில் முதல் நாளில், 15க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு, ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டர் கருத்தரித்தல் மைய, மகளிர் மகப்பேறு பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் மணிமேகலைபழனிசாமி விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
முகாமில் குழந்தை இல்லா தம்பதிகளுக்கான மருத்துவ ஆலோசனை, ஸ்கேன், விந்தணு பரிசோதனை மற்றும் ஐ.யு.ஐ., போன்ற இலவச சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
ஐ.வி.எப்., ஐ.சி.எஸ்.ஐ., போன்ற சிகிச்சைகளுக்கு சிறப்பாக சலுகை கட்டணம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் லேப்ராஸ்கோபி, ஹிஸ்ட்ராஸ்கோபி போன்ற அறுவை சிகிச்சைகள் மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
முகாம் நேற்று துவங்கி வரும், 15 ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், தேவைப்படும் தம்பதியர் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பழனிசாமி கூறினார்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 82208 00800 80564 04040 என்ற எண்ணில்தொடர்பு கொள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.