ADDED : ஆக 23, 2025 11:58 PM
திருப்பூர் : திருப்பூர் கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் சதீஷ்குமார் அறிக்கை:
கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு மற்றும் அதன் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்து 10 நாள் முழு நேரப் பயிற்சி வகுப்புகள் வரும் 25ம் தேதி துவங்குகிறது.
இதில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் சேரலாம். குறைந்த பட்சம் எழுதப்படிக்கத் ெதரிந்திருக்க வேண்டும். பயிற்சி முற்றிலும் இலவசம். ஆண், பெண் தனி விடுதி வசதி உள்ளது. மேலும், உணவு மற்றும் தேனீர் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிவில் மத்திய அரசின் அனுமதி பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். சுய தொழில் துவங்கவும், வங்கி கடனுதவி பெறவும் வழிகாட்டப்படும். பயிற்சியில் இணைய விரும்புவோர், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில் உள்ள பயிற்சி மையத்துக்கு நேரில் வரவும்.
மேலும் விவரங்களுக்கு 94424 13923, 99525 18441 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.