sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தயார் நிலையில் விநாயகர் சிலைகள்

/

தயார் நிலையில் விநாயகர் சிலைகள்

தயார் நிலையில் விநாயகர் சிலைகள்

தயார் நிலையில் விநாயகர் சிலைகள்


ADDED : ஆக 09, 2025 11:50 PM

Google News

ADDED : ஆக 09, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி ஹிந்து முன்னணியினர் திருப்பூர் மாவட்டத்தில், 5 ஆயிரம் சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இதையொட்டி, மாநகரில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து கமிஷனர் ஆலோசனை மேற்கொண்டார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும். நடப்பாண்டு, வரும், 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு கள் மூலம் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி திருப்பூர் அலகுமலை, வஞ்சிபாளையம் பிரிவு என, இரு இடங்களில் முழு வீச்சில் நடக்கிறது. இப்பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. தமிழகம் முழுவதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. மாநகரில் ஆயிரத்து, 100 சிலைகள் உட்பட மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 27ம் தேதி துவங்கும் விழாவை, பத்து நாள் கொண்டாட உள்ளனர். இந்தாண்டு, 'நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்' என்ற கருப்பொருளோடு கொண்டாடப்படுகிறது. 30ம் தேதி நகரில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.

இதேபோன்று, வெவ்வேறு அமைப்புகளும் விநாயகர் சிலைகளைத் தயார் செய்து, விழா கொண்டாட்டத்துக்கு தயாராக உள்ளன.

போலீசார் ஆயத்தம் விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனைகளை திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்தந்த சரக பகுதியில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் ஹிந்து அமைப்புகளை அழைத்து கூட்டங்கள் நடத்தி தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us