sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளிகளுக்கு 'கேட்' ரோட்டரி சங்கம் சேவை

/

அரசு பள்ளிகளுக்கு 'கேட்' ரோட்டரி சங்கம் சேவை

அரசு பள்ளிகளுக்கு 'கேட்' ரோட்டரி சங்கம் சேவை

அரசு பள்ளிகளுக்கு 'கேட்' ரோட்டரி சங்கம் சேவை


ADDED : மார் 20, 2024 12:11 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி;அவிநாசி அருகே தெக்கலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காந்தி நகர் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் 'கேட்' அமைத்து கொடுக்கப்பட்டது.

தெக்கலுாரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காந்திநகர் நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர்களுக்கு கதவுகள் இல்லாமல் போதிய பாதுகாப்பின்றி இருந்தது. இதையறிந்த, தெக்கலுார் ரோட்டரி சங்கம் சார்பில் இரு பள்ளிகளுக்கும் மெயின் கேட் அமைத்து கொடுக்கப்பட்டது.

அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட முன்னாள் கவர்னர் ஜார்ஜ் சுந்தர்ராஜன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தேவராஜன், வட்டார கல்வி அலுவலர்திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

தெக்கலுார் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தாமணி, காந்தி நகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கசாமி, முன்னாள் தலைவர் நடராஜன், முன்னாள் மாணவர் பேரவை தலைவர் சாந்தாமணி, ஊராட்சி மன்ற தலைவர் மரகதமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா, ஜெயந்தி, பொருளாளர் பிரபு பங்கேற்றனர். ரோட்டரி சங்க செயலாளர் சிவகுமார் நன்றியுரை கூறினார்.






      Dinamalar
      Follow us