sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிறுவனங்கள் தொழில் உரிமம் பெற்று கொள்ளுங்க! நகராட்சி அறிவுறுத்தல்

/

நிறுவனங்கள் தொழில் உரிமம் பெற்று கொள்ளுங்க! நகராட்சி அறிவுறுத்தல்

நிறுவனங்கள் தொழில் உரிமம் பெற்று கொள்ளுங்க! நகராட்சி அறிவுறுத்தல்

நிறுவனங்கள் தொழில் உரிமம் பெற்று கொள்ளுங்க! நகராட்சி அறிவுறுத்தல்


ADDED : பிப் 15, 2025 06:48 AM

Google News

ADDED : பிப் 15, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை நகராட்சி பகுதிகளிலுள்ள தொழில் நிறுவனங்கள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 74 ஆயிரத்து, 500 பேர் வசிக்கின்றனர், இங்கு, 18 ஆயிரத்து, 670 வீடுகளும், 3,068 வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களின், வணிக உரிமம் வாயிலாக, ஆண்டுக்கு, ரூ. 20 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், பிப்., மாதத்திற்கும் வணிக நிறுவனங்கள், வணிக உரிமம் புதுப்பிக்க வேண்டும். 2025-26ம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பிக்க நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நகை கடை, மளிகை கடை, உணவகம், மண்டபம், ஒர்க் ஷாப்கள், ேஷாரூம், பேன்சி, செப்பல் கடை, பியூட்டி பார்லர் என அனைத்து வணிக நிறுவனங்களும், வணிக மின் இணைப்பு, ஜி.எஸ்.டி., பெற்று சொந்த குடியிருப்பில் ஆன்லைன் வாயிலாக வர்த்தகம் செய்பவர்களும் உரிமம் பெற வேண்டும்.

வணிகம் அடிப்படையில், மளிகை கடை, ரூ.700 முதல், 3 ஆயிரம் வரையும், உணவகம், ரூ.3ஆயிரம் முதல் 5 ஆயிரம், தங்கும் விடுதி, 3 ஆயிரம் முதல், 10 ஆயிரம் வரையும், மருந்து கடைகள் ரூ. 700 முதல், 3 ஆயிரம், ஜவுளிக்கடைகளுக்கு, ரூ. 3 ஆயிரம் முதல், 5 ஆயிரம் என தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப, 30 ஆயிரம் ரூபாய் வரை வணிக உரிமத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிக உரிமம் பிப்., மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும், என்பதால் குறைந்த நாட்களே உள்ளன. மார்ச், 1ம் தேதிக்கு பின், உரிமம் பெற, நிர்ணயிக்கப்பட்ட தொகையில், 25 சதவீதம் அபராதத்துடன் செலுத்த வேண்டும்.

எனவே, வணிக நிறுவன உரிமையாளர்கள் உடனடியாக நகராட்சியில், உரிய படிவம் வாயிலாக, தொழில் உரிமம் கட்டணம் செலுத்த வேண்டும்.

உரிமம் பெறாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விதி உள்ளதால், இம்மாத இறுதிக்குள் அனைத்து வணிக நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும், என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us