/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அஞ்சல் தலை சேகரிப்பு ஊக்கத்தொகை பெறலாம்
/
அஞ்சல் தலை சேகரிப்பு ஊக்கத்தொகை பெறலாம்
ADDED : ஆக 08, 2025 11:44 PM
திருப்பூர்:
திருப்பூர் தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:
தபால் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 'தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா' என்றபெயரில் ஊக்கத் தொகை திட்டம், நடைமுறையில் உள்ளது.
தபால் தலை சேமிப்பு கணக்கு வைத்துள்ள, 6 முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பித்தவர்களுக்கு, முதல் கட்டமாக வினாடி - வினா எழுத்து தேர்வு, அடுத்த மாதம், 20ம் தேதி, அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம், 1ம் தேதிக்குள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு dotirupur.tn@indiapos t.gov.in அல்லது, 0421-2239785 என்றஎண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.