/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளிக்கு 'களை' கட்டியது ஆட்டுச்சந்தை; கட்டுச்சேவல் விற்பனையும் அபாரம்
/
தீபாவளிக்கு 'களை' கட்டியது ஆட்டுச்சந்தை; கட்டுச்சேவல் விற்பனையும் அபாரம்
தீபாவளிக்கு 'களை' கட்டியது ஆட்டுச்சந்தை; கட்டுச்சேவல் விற்பனையும் அபாரம்
தீபாவளிக்கு 'களை' கட்டியது ஆட்டுச்சந்தை; கட்டுச்சேவல் விற்பனையும் அபாரம்
ADDED : அக் 28, 2024 11:39 PM

உடுமலை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உடுமலை சந்தையில், ஆடுகள், நாட்டுக்கோழி விற்பனை களைகட்டியது.
உடுமலை நகராட்சி வாரச்சந்தையில், வாரம் தோறும் திங்கட்கிழமை, காலை, ஆடு மற்றும் நாட்டுக்கோழி சந்தை கூடி வருகிறது. உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள், ஆடு, மாடுகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை வரும், 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், உடுமலை ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகை விற்பனை களை கட்டியது. நேற்று அதிகாலை, 5:30 மணி முதலே, ஆடுகள் வரத்து காணப்பட்டது.
வழக்கமாக, உடுமலை சந்தைக்கு, 700 ஆடுகள் வரத்து இருக்கும் நேற்றைய சந்தைக்கு, தீபாவளி பண்டிகை காரணமாக, ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஏறத்தாழ, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வருகையும் அதிகளவு காணப்பட்டது. பண்டிகை காரணமாக ஆடுகளின் தரத்திற்கு ஏற்ப, கூடுதல் விலைக்கு விற்பனையானது.
ஆடுகள் குறைந்த பட்சம், 2 ஆயிரம் முதல், பெரிய அளவிலான ஆடுகள், 18 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.
அதே போல், நாட்டுக்கோழி சந்தைக்கு, நாட்டுக்கோழிகள், சேவல், கட்டுச்சேவல் என, 500க்கும் மேற்பட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ரகத்திற்கு ஏற்ப, 350 முதல், 6,700 ரூபாய் வரை விற்றன.
வியாபாரிகள் கூறுகையில், 'தீபாவளி பண்டிகை காரணமாக, உடுமலை சந்தைக்கு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வரத்து காணப்பட்டன. வழக்கமான விலையை விட, கூடுதல் விலைக்கு விற்றன. அதே போல், நாட்டுக்கோழிகள் மற்றும் கட்டுச்சேவல்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. பண்டிகை காரணமாக விற்பனை அதிகரித்து, நேற்று ஒரே நாளில், ஏறத்தாழ, 50 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடந்தது,' என்றனர்.