sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

/

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


ADDED : ஜன 08, 2025 12:23 AM

Google News

ADDED : ஜன 08, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சாமளாபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 34. கோவையில் நில அளவையாளராகப் பணியாற்றுகிறார். கடந்த, 2018ல், அரசு பஸ்சில் பயணித்தார். அவர் சென்ற பாஸ் பல்லகவுண்டம்பாளையம் அருகே விபத்துக்குள்ளானதில், காயமடைந்தார். இதற்கு இழப்பீடு கேட்டு, வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இதில் அவருக்கு, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

இதனால், அவர் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, மனு அளித்தார். விசாரித்த நீதிபதி ஸ்ரீகுமார் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.






      Dinamalar
      Follow us