/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
/
இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
ADDED : ஏப் 08, 2025 06:25 AM

திருப்பூர்; திண்டுக்கல் மாவட்டம், விராலிமலையை சேர்ந்தவர் சூர்யா, 25. கடந்த, 2017ல், தாராபுரம் ஐ.டி.ஐ.,யில் படித்து வந்தார். அரசு பஸ்சில் தாராபுரத்துக்கு சென்றபோது, வடக்கு அவிநாசிபாளையம் - கே.ஆண்டிபாளையம் ஸ்டாப் அருகே, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் சூர்யா படுகாயமடைந்தார். காலில் எலும்பு முறிவு மற்றும் கைகளில் அடிபட்டது. சிகிச்சைக்கு பின் உயிர் தப்பினார்.
திருப்பூர் விபத்து இழப்பீடு தீர்ப்பாய கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். கடந்த, 2024 ஜூன், 11ல் சூர்யாவுக்கு, 5 லட்சத்து, 79 ஆயிரத்து, 575 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். நேற்று கோர்ட் ஊழியர்கள் அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட் வளாகத்துக்கு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல்கள் முருகேசன், சத்யா ஆஜராகினர்.