sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேசிய துக்க தினத்தில் அமைச்சர் தலைமையில் அரசு விழா: பொது மக்கள் அதிர்ச்சி

/

தேசிய துக்க தினத்தில் அமைச்சர் தலைமையில் அரசு விழா: பொது மக்கள் அதிர்ச்சி

தேசிய துக்க தினத்தில் அமைச்சர் தலைமையில் அரசு விழா: பொது மக்கள் அதிர்ச்சி

தேசிய துக்க தினத்தில் அமைச்சர் தலைமையில் அரசு விழா: பொது மக்கள் அதிர்ச்சி

3


UPDATED : டிச 28, 2024 07:46 AM

ADDED : டிச 28, 2024 06:32 AM

Google News

UPDATED : டிச 28, 2024 07:46 AM ADDED : டிச 28, 2024 06:32 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில், தேசிய துக்க தினத்திலும், சால்வை, கை தட்டலுடன் அரசு விழாக்களும், துணை முதல்வர் பிறந்த நாள் விழாவும், அமைச்சர் தலைமையில் நடந்ததால், தி.மு.க.,வினரே அதிருப்தியடைந்தனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, ஒரு வாரம் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம், கடத்துாரில், துக்க தினத்தில் அரசு விழா நடந்தது. வாழை தோரணங்கள் கட்டப்பட்டு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி.,ஈஸ்வரசாமி உள்ளிட்டோருக்கு, கைதட்டல்களுடன், சால்வை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேடையில், அமைதியாக விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு, முடிவுற்ற திட்ட பணிகள் துவக்கம், ரேஷன் கடை திறப்பு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா நடந்தது.

தொடர்ந்து, கொமரலிங்கம், சங்கராமநல்லுார் பேரூராட்சிகள் மற்றும் ஒன்றிய பகுதிகளில், ரூ.62.98 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள் துவங்கி வைக்கும் விழாவும், ரூ.5.79 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.

இதில், அமைச்சர் பேசுகையில், முன்னாள் பிரதமர் மறைவால், அமைதியாக விழா நடப்பதாக தெரிவித்ததோடு, தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினார். முன்னதாக, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி மட்டும் செலுத்தப்பட்டது.

உடுமலை நகராட்சி, தாகூர் மாளிகையில், மாலை, 5:00 மணிக்கு, 3 மாதமாக செயல்பட்டு வரும், மாவட்ட அரசு இசைப்பள்ளி துவக்க விழாவும், மாவட்ட அளவில், கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவும், மார்கழி கலை இலக்கிய விழா நடந்தது.

காங்., உடன் கூட்டணி அமைத்து, 10 ஆண்டுகள், மன்மோகன்சிங் அமைச்சரவையில் அமைச்சர் பதவிகளை பெற்று, அனுபவித்து வந்த தி.மு.க., அரசு,தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்ட நாளில், அமைச்சர் தலைமையில் விழாக்கள் நடத்தியது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us