sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளி தேர்ச்சி சரிவு

/

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளி தேர்ச்சி சரிவு

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளி தேர்ச்சி சரிவு

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளி தேர்ச்சி சரிவு


ADDED : மே 09, 2025 06:48 AM

Google News

ADDED : மே 09, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவில், பிளஸ் 2 தேர்வு முடிவில் அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

நமது மாவட்டத்தில், 69 அரசு பள்ளிகளை சேர்ந்த, 4,553 மாணவர், 4,353 மாணவியர் என மொத்தம், 8,906 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர். இதில், 4,304 மாணவர், 4,232 மாணவியர் என, 8,536 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர் தேர்ச்சி 94.53 சதவீதம், மாணவியர் தேர்ச்சி, 97.22 சதவீதம். கடந்தாண்டு, 95.92 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த அரசு பள்ளிகள்; நடப்பாண்டு, 0.07 சதவீதம் குறைந்து, 97.85 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

எட்டு மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 783 மாணவர், 2,193 மாணவியர் என, 2,976 பேர் தேர்வெழுதினர். 714 மாணவர்கள், 2,114 மாணவியர் என, 2,828 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டு, 95.03 சதவீத தேர்ச்சி பெற்ற மாநகராட்சி பள்ளிகள், நடப்பாண்டு, மீண்டும் 95.03 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

உதவி பெறும் பள்ளி


மாவட்டத்தில், 18 அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,053 மாணவர், 2,044 மாணவியர் என, 3,097 பேர் தேர்வெழுதினர். 1,006 மாணவர், 2,009 மாணவியர் என, 3,015 பேர் தேர்ச்சி பெற்றனர். பிற மேலாண்மை பாடப்பிரிவுகளை ஒப்பிடும் போது, அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம், 1.14 சதவீதம் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு, 96.21 சதவீதம் தேர்ச்சி பெற்ற இப்பள்ளிகள், நடப்பாண்டு, 97.35 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது.

ஒரு மாணவரால்...


ஒன்பது சுயநிதி பள்ளிகளை சேர்ந்த, 365 மாணவர், 425 மாணவியர் என, 790 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 364 மாணவர், 425 மாணவியர் என, 789 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வெழுதிய அனைத்து மாணவியரும் தேர்ச்சி பெற்றதால், மாணவியர் தேர்ச்சி சதவீதம், 100. ஒரே ஒரு மாணவர் மட்டும் தேர்ச்சி பெறாததால், மாணவர் தேர்ச்சி சதவீதம், 99.73. இதனால், சுயநிதி பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், 99.87. இருப்பினும், கடந்த ஆண்டோடு (99.36) ஒப்பிடுகையில், 0.52 சதவீதம் கூடுதலாகவே சுயநிதி பள்ளிகள் பெற்றுள்ளது.

மெட்ரிக் பள்ளி


மாவட்டத்தில், 112 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த, 4,981 மாணவர், 4,847 மாணவியர் என, 9,828 பேர் தேர்வெழுதினர். 4,962 மாணவர், 4,834 மாணவியர் என, 9,796 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் அரசு உதவி பெறும், மாநகராட்சி, அரசு பள்ளிகளை ஒப்பிடும் போது, மாணவர், மாணவியர் தேர்ச்சி இரண்டிலும், 99 சதவீதத்துக்கு கூடுதலான தேர்ச்சியை மெட்ரிக், பள்ளிகளே பிடித்துள்ளது.






      Dinamalar
      Follow us