/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பால்பேட்மின்டன் போட்டி அரசு பள்ளிகள் அபாரம்
/
பால்பேட்மின்டன் போட்டி அரசு பள்ளிகள் அபாரம்
ADDED : அக் 26, 2025 03:08 AM
திருப்பூர், அக். 26-
பள்ளி கல்வித்துறை சார்பில், அலகுமலை வித்யாலயா பள்ளியில், மாவட்ட மாணவர் பால்பேட்மின்டன் போட்டி நேற்று நடந்தது. ஏழு குறுமையங்களில் இருந்து, 65 பேர் பங்கேற்றனர்.
போட்டிகளை அலகுமலை வித்யாலயா பள்ளி செயலாளர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். 19 வயது பிரிவில், சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது; 2 - 0 என வித்ய விகாசினி பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது.
17 வயதினர் பிரிவில் அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்; வித்ய விகாசினி பள்ளி அணி இரண்டாமிடம்.
14 வயது பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அணி முதலிடம், உடுமலை, ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி அணி, 2வது இடம் பெற்றது.
14 வயது பிரிவினருக்கான சிலம்பம் போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், நேற்று, அலகுமலை வித்யாலயா பள்ளியில், 17 மற்றும் 19 வயது பிரிவினருக்கான சிலம்பம் போட்டிகள் நடந்தது. ஏழு குறுமையங்களில் இருந்து, 63 பேர் பங்கேற்றனர்.

