/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு சுவர் முழுக்க விளம்பர போஸ்டர்; அதிகாரிகள் அலட்சியம்
/
அரசு சுவர் முழுக்க விளம்பர போஸ்டர்; அதிகாரிகள் அலட்சியம்
அரசு சுவர் முழுக்க விளம்பர போஸ்டர்; அதிகாரிகள் அலட்சியம்
அரசு சுவர் முழுக்க விளம்பர போஸ்டர்; அதிகாரிகள் அலட்சியம்
ADDED : டிச 01, 2024 10:54 PM
உடுமலை; உடுமலையில், அரசு அலுவலகங்கள், பள்ளி, மருத்துவமனை, ரோடுகளின் மையத்தடுப்புகளில், அரசியல் கட்சியினர், தனியார் விளம்பர போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் ஒட்டப்பட்டு, அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
உடுமலையில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரோடு சந்திப்புகளில் விதி மீறி, பிளக்ஸ் பேனர்கள் அதிகளவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், அரசு சுவர்களிலும், அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்களின் போஸடர்கள் ஒட்டப்பட்டு, அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.
உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், கிளைச்சிறை, சார்பதிவாளர் அலுவலகம், சார்நிலைக்கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் இப்பகுதியிலுள்ள, சுவர்களில் அரசியல் கட்சியினர் போட்டி, போட்டு, போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா மற்றும் பஸ் ஸ்டாண்ட் வளாகம், அரசு பள்ளி வளாகங்கள் என அரசுக்கு சொந்தமான இடங்களில், விதி மீறி போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. அரசு துறை அதிகாரிகள், தங்கள் அலுவலக சுவர் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளது குறித்து கண்டு கொள்வதில்லை.
தளி ரோடு ரயில்வே மேம்பாலம், பிரதான ரோடுகளான,பழநி ரோடு, தாராபுரம் ரோடுகளில் உள்ள மையத்தடுப்புகளிலும், போக்குவரத்து எச்சரிக்கை குறியீடுகள், அறிவிப்பு பலகைகளை மறைத்து, போஸ்டர்கள் அதிகளவு ஒட்டப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்துக்களும் ஏற்படுகிறது.
எனவே, அரசு சுவர்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவோர், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், முழுமையாக அவற்றை அகற்றி, வர்ணம் பூசவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.