sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு; 37 பேருக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு

/

அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு; 37 பேருக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு

அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு; 37 பேருக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு

அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு; 37 பேருக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு


ADDED : ஆக 08, 2025 09:25 PM

Google News

ADDED : ஆக 08, 2025 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; 'நீட்' தேர்வெழுதி, மாநில அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வாயிலாக, மருத்துவக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.

இதில், மாவட்டத்தில், 37 அரசுப்பள்ளி மாணவ, மாணவியர், மருத்துவக்கல்வி பயில தகுதி பெற்றுள்ளனர்.

தமிழக அரசு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதால், அரசு பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் 'நீட்' தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று அதிகளவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் மருத்துவக்கல்வி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி, 'நீட்' தேர்வுக்கு அவர்களை தயார்படுத்தும் பணியில், மாவட்ட கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது.

ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு மாணவ, மாணவியர், 'நீட்' தேர்வெழுதி, மருத்துவம் படிக்க தேர்வாகின்றனர்.

நடப்பாண்டு மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில், 386 பேர் 'நீட்' நுழைவு தேர்வெழுத விண்ணப்பித்தனர். அவர்களில், 354 பேர் தேர்வெழுதினர். 163 பேர் தகுதி பெற்றனர்.

மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 21 பேர், பி.டி.எஸ்.,(பல் மருத்துவம்) படிப்புக்கு, 6 பேர் என, மொத்தம், 27 பேர் மருத்துவம் படிக்கும் ஆணையை பெற்றனர்.

இவர்கள் தவிர தகுதி பெற்ற, 10 பேர், பி.டி.எஸ்., படிப்பை தொடர விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர். 9 பேர், பொது கவுன்சிலிங்கிற்காக காத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us