sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மூன்று ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் ரத்து 

/

மூன்று ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் ரத்து 

மூன்று ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் ரத்து 

மூன்று ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் ரத்து 


ADDED : நவ 03, 2025 09:42 PM

Google News

ADDED : நவ 03, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -: நவ. முதல் தேதி, உள்ளாட்சி தினம் முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில் உள்ள 265 ஊராட்சிகளில் நடந்தது.

இதில், திருப்பூர் ஒன்றியம், இடுவாய் மற்றும் முதலிபாளையம் ஊராட்சிகளிலும், பல்லடம் ஒன்றியம் வேலம்பாளையம் ஊராட்சியிலும், கிராம சபா கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

மீதமுள்ள 262 ஊராட்சிகளிலும் நடந்த கூட்டத்தில் மொத்தம் 18,682 ஆண்களும் 26,689 பெண்களும் பங்கேற்று, 4,837 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us