sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளியில் முப்பெரும் விழா; மாணவர்கள் கலைநிகழ்ச்சி

/

பள்ளியில் முப்பெரும் விழா; மாணவர்கள் கலைநிகழ்ச்சி

பள்ளியில் முப்பெரும் விழா; மாணவர்கள் கலைநிகழ்ச்சி

பள்ளியில் முப்பெரும் விழா; மாணவர்கள் கலைநிகழ்ச்சி


ADDED : பிப் 07, 2025 08:36 PM

Google News

ADDED : பிப் 07, 2025 08:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், முப்பெரும் விழா நடந்தது.

பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் கூடல் விழா, விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் ஜெகநாத ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தார்.

தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் தமிழ் கூடல் விழா குறித்து பேசினார். மாணவி ஹாசினியின் பலகுரல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களின் நாடகம் நடந்தது.

மேலும், வேறு பள்ளி மாணவர்களும் விழாவில் பங்கேற்று பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர். மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், லக்கி கார்னர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டுவிழாவில் மாணவர்களின் கவிதை வாசிப்பு, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

தமிழாசிரியர் ரேணுகா, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us