sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சரிகிறது நிலத்தடி நீர் 'போர்வெல்' பணி சுறுசுறு

/

சரிகிறது நிலத்தடி நீர் 'போர்வெல்' பணி சுறுசுறு

சரிகிறது நிலத்தடி நீர் 'போர்வெல்' பணி சுறுசுறு

சரிகிறது நிலத்தடி நீர் 'போர்வெல்' பணி சுறுசுறு


ADDED : நவ 08, 2025 11:51 PM

Google News

ADDED : நவ 08, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இயல்பாக பெய்ய வேண்டிய பருவமழை இன்னும் கிடைக்கவில்லை. மிகவும் குறைவான மழை பெய்ததால் நிலத்தில் ஈரப்பதம் குறைந்து நிலம் வறண்டு கிடக்கிறது.

மானாவாரியில் சாகுபடி செய்த பயிர்கள் கருகி வருகின்றன. பெரும்பாலான விவசாயிகள் தென்னை, வாழை, மா உள்ளிட்ட நீண்டகால பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

மழை ஏமாற்றம் தந்ததால் தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, போர்வெல் மோட்டார்களை முழுவீச்சில் இயக்கி வருகின்றனர். பல்வேறு ஊராட்சிகள் குடிநீருக்காக நிலத்தடி நீரையே நம்பி உள்ளன. குடிநீர் மோட்டார்களும் இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன.

கடந்த மாதம் செய்த மழையால் சிறிதளவு உயர்ந்திருந்த நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் கீழே சரியத் துவங்கியுள்ளது.

இதனால், விவசாயிகள் வேறு வழியின்றி புதிதாக ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஒரு மாதமாக ஓய்ந்திருந்த 'போர்வெல்' வண்டி சத்தம் மீண்டும் கேட்கத் துவங்கி உள்ளது.






      Dinamalar
      Follow us