/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குரூப் - 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்
/
குரூப் - 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஜன 30, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலையில், டி.என்.பி.எஸ்.பி., குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில், உடுமலை நகராட்சி எக்ஸ்டன்சன் பள்ளியில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் -4 தேர்வுக்காகான பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சி முகாமில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.

