sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துப்பாக்கிக்கு வேலை இல்லை

/

துப்பாக்கிக்கு வேலை இல்லை

துப்பாக்கிக்கு வேலை இல்லை

துப்பாக்கிக்கு வேலை இல்லை


ADDED : மார் 18, 2024 12:35 AM

Google News

ADDED : மார் 18, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டத்தில், உரிமம் பெற்று பயன்படுத்தி வரும், 400 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், கட்சியினர் அமைத்துள்ள பேனர்கள், கொடிக்கம்பம், பெயர் பலகை அகற்றப்பட்டு வருகின்றன. உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளோர் போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 400 மற்றும் மாநகரில், 61 என, 461 பேர் உரிமம்பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர்.

தேர்தல் விதிமுறை அமலுக்கு பின், நேற்று மாவட்டத்தில், 340 பேரும், மாநகரில், 60 பேர் என, மொத்தம், 400 பேர் தங்கள் துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைத்து உள்ளனர்.

இன்னும் சில நாட்களில், அனைத்து துப்பாக்கிகளும் பெறப்பட்டு விடும் என்று போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us