sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 குட்கா, கஞ்சா, மது விற்றவர்கள் கைது

/

 குட்கா, கஞ்சா, மது விற்றவர்கள் கைது

 குட்கா, கஞ்சா, மது விற்றவர்கள் கைது

 குட்கா, கஞ்சா, மது விற்றவர்கள் கைது


ADDED : நவ 23, 2025 06:51 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தெற்கு போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பரதேசி, 24, என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் 2.4 கிலோ எடையுள்ள குட்கா பாக்கெட்டுகள் இருந்தது. அதைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

தெற்கு போலீசார் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ரூபேஸ் குமார், 20 என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவரிடம் 200 கிராம் எடையில் கஞ்சா சாக்லெட் இருந்தது. அதைப் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

அதே போல் நல்லுார் போலீசார் புதுார் பிரிவில் நடத்திய சோதனையின் போது, விகாஷ், 19 என்பவர் சிக்கினார். அவரிடமிருந்து 600 கிராம் எடையில் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.

வீரபாண்டி போலீசார், முருகம்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். அங்குள்ள டாஸ்மாக் பார் அருகே, மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. அதில் ஈடுபட்ட பிரதீப், 47 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 29 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லாட்டரி விற்றவர்கள் கைது பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியில், லாட்டரி டிக்கெட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தெற்கு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஆறுமுகம், 55 மற்றும் சுரேஷ், 44 ஆகியோர் லாட்டரி விற்பது தெரிந்தது. வழக்கு பதிந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us