ADDED : மார் 18, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கள்ளியங்காட்டு பிரிவு பகுதியில், சந்தேகமான முறையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அந்நபர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, விற்பனைக்காக வைத்திருந்து தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், அந்நபர் அதே பகுதியைச்சேர்ந்த சரவணகுமார், 42 என்பது தெரிய வந்தது. அந்நபரை கைது செய்து, 30 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.